Published : 26 Aug 2017 09:14 AM
Last Updated : 26 Aug 2017 09:14 AM

தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு: எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நேற்று 21 ஆக உயர்ந்தது. நேற்றிரவு விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் அடையாறு வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி தினகரனை சந்தித்து ஆதரவளித்தார். இதன் மூலம், தினகரன் ஆதரவு எமஎல்ஏக்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. ரத்தினசபாபதி முதல்வர் பழனிசாமியையும் சந்தித்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிவித்தார்.

அதே நேரம், புதுச்சேரியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவாளர்கள் தங்களுக்கு மேலும் பல எம்எல்ஏக்கள் ஆதரவளிப்பார்கள் என தெரிவித்து வந்தனர். இதை மெய்ப்பிக்கும் விதமாக நேற்று இரவு விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு வந்தார், அவர் தினகரனை சந்தித்து தன் ஆதரவை அளித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறாக தினகரனுக்கு ஆதரவு அதிகரித்துவருவது முதல்வர் பழனிசாமி தரப்புக்கு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது. தற்போது இருக்கும் எம்எல்ஏக்களையும் இழந்துவிடாமல் அவர்களை தடுக்கும் முயற்சியில் முதல்வர் தரப்பினர் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x