Published : 05 Aug 2017 09:12 AM
Last Updated : 05 Aug 2017 09:12 AM
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத் துவது, 8-வது ஊதியக்குழு பரிந் துரைகளை விரைந்து நடைமுறைப் படுத்துவது, 25 சதவீத இடைக்கால நிவாரணம், அரசு துறைகளில் பணியாற்றும் தற்காலிக, தொகுப் பூதிய, மதிப்பூதிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சென்னை சேப்பாக்கத்தில் அரசு பணியாளர் கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை அந்த அமைப் பின் சிறப்புத் தலைவர் கு.பால சுப்பிரமணியன் தொடங்கி வைத் தார். அவர் பேசும்போது, “கோரிக் கைகள் நிறைவேற்றப்படா விட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். டாஸ்மாக் கடை கள் மூடப்படுவதால் அங்கு பணி யாற்றும் ஊழியர்கள் வேலை இழக்கக்கூடிய சூழல் உருவாகி யுள்ளது. அந்த நிலை ஏற்படா வண்ணம் அவர்களை வேறு துறைகளுக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
உண்ணாவிரதப் போராட்டத் துக்கு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.கே.சிவகுமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் எம்.கணேசன் முன்னிலை வகித்தார்.
பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். மாலையில், அரசு பணியாளர் சங்க முன்னாள் தலைவர் கு.பால்பாண்டியன் நிறைவுரை ஆற்றினார். மாநில பொருளாளர் சா.சாகுல் அமீது நன்றி கூறினார். சென்னை மாவட்டத் தலைவர் ராஜன், துணைத்தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT