Published : 27 Aug 2017 11:52 AM
Last Updated : 27 Aug 2017 11:52 AM
அசாமைச் சேர்ந்தவர் கவுரத் குமார் சர்மா (25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள விளம்பர நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் சசிராய் (25) உள்ளிட்ட நண்பர்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தார். அனைவரும் கடலில் குளித்தனர். அப்போது கவுரத் குமார் சர்மா, சசிராய் இருவரும் கடலில் மூழ்கினர். கரையோரம் நின்றவர்கள் சசிராயை மீட்டனர். கவுரத் குமார் சர்மா மாயமானார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து தேடினர். இந்நிலையில், நேற்று காலை மெரினா கடற்கரையில் கவுரத் குமார் சர்மா சடலமாக கரை ஒதுங்கினார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT