Published : 31 Jul 2017 08:44 PM
Last Updated : 31 Jul 2017 08:44 PM

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை

முதல்வர் பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏக்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.

அதிமுகவில் தற்போது முதல்வர் பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்று அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஓபிஎஸ் அணியும், முதல்வர் பழனிசாமி அணியும் இணைவதில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது.

இந்த சூழலில் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் வேறு யாரும் இல்லை. அவர் எங்களின் பங்காளிதான் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.ஓபிஎஸ் என் சகோதரரைப் போன்றவர் என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அமைச்சர்கள், கட்சி தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அணிகள் இணைப்பு குறித்தும், தினகரன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x