Published : 11 Aug 2017 09:27 AM
Last Updated : 11 Aug 2017 09:27 AM

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரன் 16-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக் கில் டிடிவி தினகரன் ஆகஸ்ட் 16-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜ ராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் மீதான விசாரணை எழும்பூர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் டிடிவி தினகரன் மீது குற்றச் சாட்டுப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், தங்கள் தரப்பு வாதங் களை கேட்காமலே நீதிபதி குற்றச் சாட்டைப் பதிவு செய்ததாக டிடிவி தினகரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன் றம், டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுப் பதிவை மீண்டும் நடத்தவும், வழக்கை 3 மாதங்களில் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி டிடிவி தினகரன் மீது மீண்டும் குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் டிடிவி தினகரன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், ‘‘குற்றச்சாட்டுப் பதிவு செய்த பிறகு, அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த எதிர்தரப்புக்கு வேறு ஒரு தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி தரப்படவில்லை. எனவே அந்த குற்றச்சாட்டுப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும்’’ என கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘‘கீழமை நீதிமன்றத்தின் ஒவ் வொரு நடவடிக்கைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது’’ என கருத்து தெரிவித்தார்.

பின்னர் ஆகஸ்ட் 16-ம் தேதி டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x