Published : 14 Aug 2017 10:22 AM
Last Updated : 14 Aug 2017 10:22 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பல மாதங்களுக்குப் பிறகு புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக ளுக்கு நீர் வரத்து அதிகரித் துள்ளது. ஆனால், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லை.
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுகிறது. அதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் வறண்டன. பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பது நிறுத்தப் பட்டதால் அந்த ஏரிக்கு நீர் வரத்து அடியோடு நின்றது. மற்ற ஏரிகளிலும் நீர் வரத்து அறவே இல்லாமல் போனது.
இந்த ஏரிகள் வறண்டதால், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், விவசாயக் கிணறுகள், கல் குவாரிகள் ஆகிய வற்றில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகரின் பல பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க சென்னைக் குடிநீர் வாரியம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
பரவலான மழை
இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ கத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பல மாதங்களுக்குப் பிறகு புழல் ஏரிக்கு விநாடிக்கு 65 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 51 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சோழவரம், பூண்டி ஏரிகளில் நீர் வரத்து அறவே இல்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம் பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 057 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு இதேநாளில் 3 ஆயிரத்து 066 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. தற்போது வெறும் 99 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT