Published : 28 Aug 2017 09:10 PM
Last Updated : 28 Aug 2017 09:10 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி முதல் கன்னியாகுமரி வரை, வடக்கு உள் தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று நிலவி வருகிறது. மேலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடியமழை பெய்யக்கூடும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT