Published : 30 Aug 2017 07:59 AM
Last Updated : 30 Aug 2017 07:59 AM

தினகரனை உலக மகா ஜோக்கராக சித்தரித்து அதிமுகவினர் நடத்திய சிரிப்பு போராட்டம்

‘தினகரன் ஒரு உலக மகா ஜோக்கர்’ என சித்தரித்து கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி,பி.முட்லூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் அவரது படத்தை பார்த்து சிரிக்கும் நூதனப் போராட்டத்தை நடத்தினர். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அருண்மொழிதேவன் எம்பி, மாவட்ட துணை செயலாளர் முருகுமாறன் எம்எல்ஏ ஆகியோரை தினகரன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார். இதனைக் கண்டித்து ‘தினகரன் ஒரு உலக மாகா ஜோக்கர்’ என சித்தரித்து அவரது படத்தை பார்த்து சிரிக்கும் நூதன போராட்டம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, பி. முட்லூர் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது.

போராட்டங்களில் பங்கேற்றவர்கள் அனைவரும் தினகரன் உருவப் படத்தை கைகாட்டி சிரித்துக் கொண்டே இருந்தனர்.

போராட்டத்தின் போது சிரித்துக் கொண்ட இருக்க வேண்டும்; ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று கட்சி நிர்வாகிகள் கட்டளையிட்டு இருந்தனர். அதன்படி இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் சிரித்து சிரித்து தங்கள் எதிரிப்பைத் தெரிவித்தனர். போராட்டம் நடப்பதைப் பார்த்த பொதுமக்கள் அதுபற்றி கேட்க, தங்களது நூதன முறை போராட்டம் பற்றி விளக்கி கூற, அவர்களும் சிரித்தபடியே பார்த்து விட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x