Published : 01 Aug 2017 09:31 AM
Last Updated : 01 Aug 2017 09:31 AM
பணி நாட்கள் குறைக்கப்பட் டதை எதிர்த்து, தொடர் போராட் டங்களில் ஈடுபட்டுவரும் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர் கள் மீது தடியடி நடத்தி கைது செய்தனர்.
நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத்துக்காக நிலம், வீடு கொடுத்த ஆயிரக் கணக்கானோர் என்எல்சி முதல் சுரங்க விரிவாக்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு என்எல்சி நிறு வனம் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு 26 நாட்கள் பணி வழங்கி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு என்எல்சி நிர்வாகம் இவர்களின் வேலை நாட்களை 19 நாட் களாக குறைத்தது.
இதனை கண்டித்தும், மீண் டும் 26 நாட்கள் பணி வழங்க கோரியும் முதல் சுரங்க விரி வாக்கத்தில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேரணி, ஆர்ப்பாட்டம், முற்றுகை, அலுவலர்கள் சிறைப்பிடிப்பு என பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வடலூர் நான்குமுனை சந்திப் பில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் திமுக சிவக்குமார், பாமக பழதாமரைக் கண்ணன், ஏஐடியூசி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்காக நெய்வேலி டிஎஸ்பி வெங்கடேசன் தலை மையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் குறிஞ்சிப்பாடி வட்டாட் சியர் ஜான்சிராணி பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. தொழிலாளர்கள் மறியலைத் தொடர்ந்தனர்.
200 பேர் கைது
தொடந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். மேலும், மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை முன் னாள் அமைச்சரும், குறிஞ்சிப் பாடி எம்எல்ஏவுமான, எம்ஆர்கே பன்னீர்செல்வம் சந் தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT