Published : 08 Aug 2017 09:19 AM
Last Updated : 08 Aug 2017 09:19 AM

சாதி மறுப்பு திருமணம் செய்தோரை பாதுகாக்க தனிப்பிரிவு தொடக்கம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கை: சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், செய்பவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க போலீஸ் துறையில் தனிப் பிரிவு உருவாக்க வேண்டுமென்றும், சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சாதி ஆணவக் கொலைக்கு உள்ளான விமலா தேவியின் கணவர் திலீப் குமார் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் ஆதரவோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் துறையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என்றும், இதற்கான நிர்வாக ஏற்பாடுகளை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென்றும் கடந்தாண்டு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த தீர்ப்பு தொடர்ந்து அமல்படுத்தப்படாமல் இருந்ததால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள் ளார். அந்த வழக்கு ஆகஸ்டு 10-ல் விசாரிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க போலீஸ் துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x