Published : 20 Aug 2017 11:25 AM
Last Updated : 20 Aug 2017 11:25 AM

காவிரி, நீட் விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து ஆக.26-ல் தி.க. ஆர்ப்பாட்டம்

காவிரி மற்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து வரும் 26-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாது அணைக் கட்டினால், மேட்டூருக்கு வரும் கொஞ்சம் தண்ணீர் கூட வராமல் போய்விடும். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று கேட்டு உரிமை மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. எனவே, மேற்கண்ட இரண்டு முக்கிய பிரச்சினைகளை முன்நிறுத்தி மத்திய அரசை கண்டித்து வரும் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். தஞ்சையில் நடக்கும் ஆர்ப்பாட்டதில் வீரமணி கலந்து கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x