Published : 10 Aug 2017 09:26 AM
Last Updated : 10 Aug 2017 09:26 AM

சென்னையிலிருந்து எர்ணாகுளத்துக்கு சுவிதா ரயில்

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - எர்ணாகுளம் இடையே சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி இரவு 10.40 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82613) மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

இதேபோல், எர்ணா குளத்தில் இருந்து செப்டம்பர் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82614) மறுநாள் காலை 8 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும்.

இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

எர்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (82614) பெரம்பூரில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x