Published : 18 Nov 2014 12:13 PM
Last Updated : 18 Nov 2014 12:13 PM
சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் வைத்தியராமன் தெருவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இங்கு நேற்று மதியம் ஒரு கடிதம் வந்தது. அதில், "பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும்’’ என்று கூறப்பட்டிருந்தது. அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் சர்வோத்தமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT