Published : 28 Aug 2017 09:08 AM
Last Updated : 28 Aug 2017 09:08 AM
சென்னை 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 9-ம் வகுப்பு மாணவன் உயிர் இழந்துள்ளார். இதேபோல் மெட்ரோ ரயில் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பலியாகி உள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயிலுக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த காலாசாமி (29) உள்பட ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பணியின்போது மின்சாரம் தாக்கியதில் காலாசாமி உயிர் இழந்தார். அயப்பாக்கம் திருவள்ளுவர் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் பெற்றோருடன் தினேஷ் (14) என்ற 9-ம் வகுப்பு மாணவன் வசித்து வந்தார். அடுக்குமாடி 4-வது தளத்தில் இருந்த புறாவை பிடிக்க முயலும்போது விழுந்து தினேஷ் உயிர் இழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT