Published : 28 Aug 2017 08:17 PM
Last Updated : 28 Aug 2017 08:17 PM

சசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

 

சசிகலாவுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியுடன் இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பிரிந்திருந்த முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின், தற்போது வரை பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதுடன், புதுச்சேரிக்கு சென்றுவிட்டனர். அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர முதல்வர் பழனிசாமி எடுத்த முயற்சி எடுத்து வருகிறார்.

இந்த சூழலில் அதிமுக அரசியல் நிலவரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில், ''திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்றால் அதிமுகவின் தலைவராக சசிகலாவை ஏற்றுக்கொண்டு தன்னை முதல்வர் ஆக்கியதற்காக அவர் நன்றியுடன் இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் ட்வீட்:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x