Published : 23 Apr 2017 06:10 PM
Last Updated : 23 Apr 2017 06:10 PM
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் கூறினார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும். அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. இரு அணிகளிடையே கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் தான் இரட்டை இலைக்கும் நல்லது.
இரு அணிகள் இணைவதில் முதற்கட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. பேச்சுவார்த்தையில் தனிப்பட்ட கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் கட்சி நலனுக்காக நல்ல தீர்வு காண வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சக்தியை நம்பி தமிழக மக்கள் கொடுத்த ஆட்சி இது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து தமிழக மக்களுக்கு ஊழலற்ற நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்'' என்று நட்ராஜ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT