Published : 12 Aug 2017 09:54 AM
Last Updated : 12 Aug 2017 09:54 AM

தூத்துக்குடி அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி அருகே கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 3.5 டன் செம்மரக் கட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கை மீண்டான் பகுதியில் உள்ள கிடங்கில், வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி ஆணையர் வருண் ரங்கசாமி, கண்காணிப்பாளர் சி.செந்தில்நாதன் தலைமையில் சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்த கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 1கோடி இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செம்மரக்கட்டைகள் ஆந்திர வனப்பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. கிடங்கில் இருந்து 10 மூட்டை பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x