Published : 17 Aug 2017 09:03 PM
Last Updated : 17 Aug 2017 09:03 PM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆராய விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதை சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்றுள்ளது. இந்த விசாரணையின் முடிவுகள் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அந்த மருத்துவமனை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளித்தோம். சென்னை மாநகரின் மூத்த மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் லண்டன், சிங்கப்பூரைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள், நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என தீவிரமாகப் போராடினோம். இவை அனைத்தும் விசாரணை ஆணையத்தின் மூலம் வெளிக்கொண்டு வரப்படும் என்றும், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் நம்புகிறோம்.
இவ்வாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT