Published : 12 Aug 2017 09:55 AM
Last Updated : 12 Aug 2017 09:55 AM
நீட் தேர்வு விவகாரத்தில் சமூக நீதி சாகடிக்கப்பட்டுவிட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வை பொறுத்தவரை நீதிமன்றத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை. சமூக நீதி சாகடிக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய அழிவு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக அவர் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்திருக்கமாட்டார். மாநில உரிமைகளையும் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார். தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தவர் ஜெயலலிதா என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT