Published : 28 Aug 2017 09:28 AM
Last Updated : 28 Aug 2017 09:28 AM
அதிமுக விவகாரம் குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘தற்போது படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கிளைமாக்ஸ் வரை பொறுத்திருங்கள்’ என்று தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார்.
நாகப்பட்டினத்தில் அவர் கூறியதாவது: தற்போது படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ‘கிளைமாக்ஸ்’ சட்டப்பேரவையில் நடக்கும். அங்கே அவர்களின் பலம் என்ன என்பது தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.
இதேபோன்று, முசிறியில் பேசிய அமைச்சர் என்.நடராஜன், ‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சசிகலா படத்தை வைக்காமல் புறக்கணித்த தினகரன், இப்போது பதவி ஆசையால் சசிகலாவை கையில் எடுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திப்போம். தினகரனை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது’ என்றார்.
திருச்சி எம்.பி ப.குமார், ‘முடிந்தால் மாவட்டச் செயலர் பதவியில் இருந்து அமைச்சர் நடராஜனை நீக்க சொல்லுங்கள் பார்ப்போம். திருச்சியில் தினகரனுக்கு ஆட்களே இல்லை’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT