Published : 08 Aug 2017 11:27 AM
Last Updated : 08 Aug 2017 11:27 AM

பொறியியல் முதல்கட்ட கலந்தாய்வு 11-ம் தேதி நிறைவு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி தொடங்கியது.

பொது கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 7 மணிக்குத் தொடங்கும் கலந்தாய்வு இரவு 7 மணியையும் தாண்டி நடைபெறுகிறது. மாணவர்கள் 9 அமர்வுகளாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர். இதுவரை மொத்தம் 70,741 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 11-ம் தேதியுடன் முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x