Last Updated : 05 Aug, 2017 08:28 AM

 

Published : 05 Aug 2017 08:28 AM
Last Updated : 05 Aug 2017 08:28 AM

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக 26 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வ கேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு சிறப்பு வழக்கறிஞர் கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 74 அரசு வழக் கறிஞர் பணியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அட்வ கேட் ஜெனரல் தலைமையில் 41 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் உள்ளன.

இவர்களில் அரசு வழக்கறிஞர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், சிறப்பு அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் பதவிகளை பொறுத்தவரை மறு உத்தரவு வரும்வரை பதவியில் தொடரலாம். அரசு வழக்கறிஞர்களின் பதவிக் காலம் ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதி மன்றக் கிளையில் பணிபுரிந்து வந்த அரசு வழக்கறிஞர்கள் 34 பேரின் 2 ஆண்டு பதவிக் காலம் மே 22-ம் தேதியுடன் முடிந்தது. இவர்களின் பதவிக் காலம் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. புதியவர்களும் நியமனம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், சென்னை உயர் நீதி மன்றத்தில் புதிதாக 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், தலா 6 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் (சிவில்), 3 அரசு வழக்கறிஞர்கள் (குற்றவி யல்) என 17 பணியிடங்களும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர், தலா 3 கூடுதல் அரசு வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் (குற்றவியல்), 2 அரசு வழக்கறிஞர்கள் (சிவில்) என 9 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 115-ல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் (எண்:580), தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர் பணியிடங்களை அதிகரிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில் 26 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள் ளது. இதனிடையே, ஏற்கெனவே காலியாக உள்ள 34 அரசு வழக்கறிஞர் காலி பணியிடத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் 4 அரசு வழக்கறிஞர்கள் என இருந்த நிலையில், தற்போது ஒரு அரசு வழக்கறிஞர் மட்டுமே இருப்பதாகவும், அமர்வு விசாரணை முடிந்து நீதிபதிகள் தனி விசாரணைக்கு போகும்போது, அரசு வழக்கறிஞருக்காக காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x