Published : 09 Aug 2017 08:27 AM
Last Updated : 09 Aug 2017 08:27 AM

கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கைது செய்யப்பட்டார்.

மண்ணிவாக்கம் ராஜிவ் தெரு வைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என் கிற போகி கிருஷ்ணன் (45). இவர் மண்ணிவாக்கம் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்தார். இவர் மீது ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கடத்தல், கொலை, மிரட்டல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு மண்ணிவாக்கத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி எம்.ஜி.முருகன் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமணி பரிந்துரை செய்தார்.

இதன்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கிருஷ்ணனை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார். இதையடுத்து இதற்கான உத்தரவு நகலை போலீஸார் புழல் சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x