Published : 01 Aug 2017 09:04 AM
Last Updated : 01 Aug 2017 09:04 AM
போலி பஸ் பாஸ் தயாரித்து சுமார் ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத் துக் கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆணை யர் அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், ‘மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக மாதாந்திர பஸ் பாஸ் மற்றும் பல்வேறு பயண சலுகை பாஸ்களை சென்னையில் 29 மையங்களில் வழங்கி வருகிறோம். சிலர் போலி பாஸ்களை தயார் செய்து மோசடி செய்துள்ளனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, போலி பஸ் பாஸ் தயாரித்து மோசடி செய்த ஆதம்பாக்கம் பணிமனை கணக்காளர் கிருஷ்ணகுமார் (41), ஜெகதீஷ் (34), அண்ணா நகர் பணி மனை மாதாந்திர டிக்கெட் விற்பனை யாளர் பிரகாஷ் (45), கணக்காளர் சுரேஷ்குமார் (43) மற்றும் திருத்தணி ரமேஷ் பாபு (32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் கடந்த 8 மாதங்களாக போலி பஸ் பாஸ் தயாரித்து ரூ.2 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணகுமார், ஜெகதீஷ், பிரகாஷ், சுரேஷ்குமார் ஆகிய 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT