Published : 04 Aug 2017 09:19 AM
Last Updated : 04 Aug 2017 09:19 AM

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழு: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைவராக நியமனம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லு நர் குழுவுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தரை தலைவராக நியமித்துள்ள தமிழக அரசு, நவம்பர் மாதத்துக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத் துக்கு பதிலாக ஏற்கெனவே நடை முறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர் வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை கடந்தாண்டு பிப்ரவரி 26-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.

இக்குழுவினர், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்து களைக் கேட்டனர். மேலும், இதுகுறி்த்து விவாதிக்க, கடந்த ஆண்டு ஜூன் 26, செப்டம்பர் 15, 16 மற்றும் 22, அக்டோபர் 6, டிசம்பர் 2 மற்றும் இந்த ஆண்டு மார்ச் 9 ஆகிய நாட்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி ஒரு குழு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுநர் குழு அறிக்கை தயாரிக்க இருந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், வல்லுநர் குழு தன் பணியைத் தொடர்ந்து மேற் கொண்டு, விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க ஏதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.தரை வல்லுநர் குழுவி்ன் தலைவராக நியமித்து, அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x