Published : 29 Aug 2017 08:20 AM
Last Updated : 29 Aug 2017 08:20 AM

வேலைநிறுத்த போராட்ட ஏற்பாடுகள்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சென்னையில் இன்று ஆலோசனை

செப்டம்பர் 7 முதல் மேற்கொள்ளவுள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஜாக்டோ - ஜியா கூட்டமைப்பின் நிர்வாகிகள் சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, தொகுப்பூதியம், மதிப்பூதிய முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.

கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காவிட்டால் செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x