Published : 30 Aug 2017 05:49 PM
Last Updated : 30 Aug 2017 05:49 PM

அதிமுக பொதுக்குழுவில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் பங்கேற்பார்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் நிச்சயம் அழைப்பு விடுக்கப்படும். பொதுக்குழு கூட்டத்தில் அவர்களும் பங்கேற்பார்கள் என்று நம்புவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''அதிமுக ஆட்சி மீதமுள்ள 4 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் அதிமுக ஆட்சி கவிழ்வதற்கு துணைபோக மாட்டோம் என்றுதான் கூறி வருகிறார்கள்.

வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு அனுப்பப்படும். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் நிச்சயம் அழைப்பு விடுக்கப்படும். பொதுக்குழு கூட்டத்தில் அவர்களும் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்'' என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x