Published : 18 Aug 2017 09:08 AM
Last Updated : 18 Aug 2017 09:08 AM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தனக்கும், தனது சகோதரர் தீபக்குக்கும்தான் சொந்தம் என்று தீபா ஏற்கெனவே கூறியிருந்தார். தீபக்கும் பலமுறை இந்தக் கருத்தை கூறியுள்ளார். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீடு தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக கடந்த ஜூன் மாதம் தீபா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். அந்த அறிவிப்பு குறித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் செய்தி தொடர்பாளர் செ.பசும்பொன்பாண்டி யன் கூறும்போது, “முதல்வரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள இயலாது. இதை எதிர்த்து தீபா சார்பில் வழக்கு தொடரப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT