Published : 12 Aug 2017 07:53 PM
Last Updated : 12 Aug 2017 07:53 PM

10 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் 10 நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தாமதமாக வருபவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. காய்ச்சல் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x