Published : 13 Aug 2017 09:33 AM
Last Updated : 13 Aug 2017 09:33 AM
“தமிழக முதல்வரும், அமைச்சர்களும் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திப்பதால் தமிழகத்துக்கு எந்த நலனும் கிடைக்கவில்லை. டெல்லியில் கட்டப்பஞ்சாயத்துதான் நடைபெற்று வருகிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்தகால ஆட்சியில் விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ. 88 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. தற்போது எந்தவித நிவாரணத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.
தமிழக முதல்வரும், அமைச்சர்களும் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திப்பதால் தமிழகத்துக்கு எந்த நலனும் கிடைக்கவில்லை. டெல்லியில் கட்டப்பஞ்சாயத்துதான் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நேரடியாக காலூன்ற முடியாததால் கிடைக்கிற குதிரையில் சவாரி செய்வதற்காக அதிமுகவை உடைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை மூன்று நான்கு, அணிகளாகப் பிரித்து வைத்து, தேர்தலை மையப்படுத்தி அதிமுகவை தன்னுடன் இணைக்க பாஜக முயற்சி செய்கிறது.
கதிராமங்கலம் பிரச்சினை, காவிரி டெல்டா மாவட்ட மக்களின் பிரச்சினை என எந்தப் போராட்டத்திலும் தீர்வு காண முடியாத நிலையிலேயே தமிழக அரசு உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT