Published : 26 Nov 2014 11:16 AM
Last Updated : 26 Nov 2014 11:16 AM

விழுப்புரம் அருகே திமுக நிர்வாகி உட்பட 2 பேர் வீட்டு மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: இருவர் சிக்கினர்

விழுப்புரம் அருகே வி.புதூர் கிராமத்துக்கு உட்பட்ட பள்ளிக்கொண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கண்டமங்கலம் ஒன்றிய திமுக விவசாய அணித் துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த தீபாவளி பண்டிகையின்போது வி.புதூர் கிராமத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றபோது, வி.புதூர், பள்ளிக்கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூடியிருந்தனர்.

அவர்களில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தவர்களை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர் பாக கடந்த 10-ம் தேதி விழுப்புரம் கோட்டாட்சியர் அனுசுயா சமாதான கூட்டத்துக்கு அழைத்திருந்தார். இதில் பள்ளிக்கொண்டாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். வி.புதூரை சேர்ந்தவர்கள் புறக்கணித்தனர்.

மறுநாள் மீண்டும் ஏற்பட்ட மோதலில் ராஜசேகருடைய வீடும் எதிர்தரப்பைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது வீடும் தாக்கப் பட்டது. இது தொடர்பாக வளவனூர் போலீஸார் இருதரப்பையும் சேர்ந்த 28 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து ராஜசேகர் ஆதரவாளர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விழுப்புரம் எஸ்.பி விக்கிரமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x