Published : 18 Nov 2014 10:48 AM
Last Updated : 18 Nov 2014 10:48 AM
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவின்படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT