Published : 05 Apr 2014 09:36 AM
Last Updated : 05 Apr 2014 09:36 AM

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு: 17 லட்சம் பேர் பயன்பெறுவர்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் என 17 லட்சம் பேர் பயன்பெறுவர்.

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். தற்போது அரசு ஊழியர்கள் தங்கள் அடிப் படை சம்பளம் மற்றும் தர ஊதியத் தில் 90 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்த்தப்படும் போதெல் லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 1.1.2014 முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அகவிலைப்படி 100 சதவீதம் ஆனது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அகவிலைப்படி உயர்வை ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசைப் போன்று தமிழக அரசும் அகவிலைப் படியை 1.1.2014 முதல் 10 சதவீதம் உயர்த்தி 100 சதவீதமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வியாழக்கிழமை வெளி யிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உடனடியாக நிலுவைத்தொகை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2014 முதல் அகவிலைப்படியை 100 சதவீத மாக உயர்த்தி (10 சதவீதம் அதிகரிப்பு) உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவை தொடர்ந்து தமிழக அரசும் ஊழியர்களுக்கு 1.1.2014 முதல் அகவிலைப்படியை 100 சதவீதமாக உயர்த்த ஆணையிட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான அக விலைப்படி உயர்வு நிலுவைத்தொகை ரொக்கமாக உடனடியாக வழங்கப்படும்.

அரசு உதவி பெறும் நிறுவனங்கள்

இந்த அகவிலைப்படி உயர்வு உத் தரவு, அரசு உதவி பெறும் கல்வி நிறு வனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், சத்து ணவு அமைப்பாளர்கள், வருவாய்த் துறை கிராம உதவி யாளர்கள், குழந்தைகள் நல அமைப் பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர் கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோ ருக்கு பொருந்தும். பகுதி நேர ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x