Published : 09 Aug 2017 08:10 AM
Last Updated : 09 Aug 2017 08:10 AM

ராஜீவ் ஜோதி இன்றுடெல்லி பயணம்

சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து ராஜீவ் ஜோதி இன்று டெல்லி எடுத்துச் செல்லப்படுகிறது.

“ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அமரர் ராஜீவ்காந்தி நினை விடத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிற்சங்கப் பிரிவுத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் ராஜீவ் ஜோதி டெல்லி எடுத்துச் செல்லப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜீவ் ஜோதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் எஸ்.எஸ்.பிரகாசத்திடம் வழங்குகிறார். ராஜீவ்காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த ஜோதி டெல்லி சென்றடையும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x