Published : 11 Aug 2017 09:43 AM
Last Updated : 11 Aug 2017 09:43 AM

பிஎஸ்என்எல் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்

செல்போன் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து பல தொலைபேசி நிறுவனங்கள் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வாடிக்கை யாளர்களை அறிவுறுத்தியுள் ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி:

மத்திய அரசு உத்தரவின்படி தற்போது உள்ள அனைத்து செல்போன் வாடிக்கையாளர்களும் தங்களது செல்போன் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள அருகில் உள்ள பிஎஸ்என்எல் சேவை மையம் அல்லது விற்பனையாளர் அல்லது நேரடி விற்பனை முகவரை ஆதார் அட்டையுடன் நேரில் அணுக வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x