Published : 06 Aug 2017 11:36 AM
Last Updated : 06 Aug 2017 11:36 AM

கதிராமங்கலத்தில் போராட்டம் தொடரும்: சீமான் உறுதி

கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் உழவை மீட்போம், உலகைக் காப்போம் என்ற கோரிக்கையுடன் உழவர் பாதுகாப்பு மாநாடு கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேறும் வரை போராட்டம் தொடரும். ஓஎன்ஜிசியால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளைக் காப்பாற்ற முடியாது.

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நீர் பங்கீட்டு முறை செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் தமிழகம் உள்ளிட்ட 4 தென் மாநிலங்களிலும் நீர் பங்கீட்டு முறை இருந்தால் பிரச்சினையே இருக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x