Published : 21 Aug 2017 10:24 AM
Last Updated : 21 Aug 2017 10:24 AM

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தினகரன் இன்று வருகை?- போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வரலாம் என தகவல் வெளியாகியுள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இடையிலான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, தற்போது இணையும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இந்த இணைப்புக்கு அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இரு அணிகள் இணைப்புக்காக பணம் பரிமாறப்பட்டதாக, தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமி நீக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதிமுக இணைப்பில் ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணியினர் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தினகரன் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணிகள் இணைந்து கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரும்முன், தினகரன் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இன்று காலை அவர் தன் ஆதரவாளர்களுடன் வரலாம் என்பதால், கட்சி தலைமை அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸ் விளக்கம்

இது தொடர்பாக காவல் துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘தினகரன் தரப்பினர் வரலாம் என தகவல் வெளியானதால், அதிமுக அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு நாளை (இன்று) காலை முதல் போடப்படும்’’ என்றனர்.

காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘தினகரன் தரப்பினர் வரலாம் என தகவல் வெளியானதால், அதிமுக அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு நாளை (இன்று) காலை முதல் போடப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x