Published : 11 Aug 2017 09:25 AM
Last Updated : 11 Aug 2017 09:25 AM
தங்கத்தின் தேவை அதிகரிப்பு, சர்வதேச அளவில் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் விலை 3 மாதங்களுக்குப் பிறகு, ரூ.22 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த சில ஆண்டுகளாக தங் கத்தில் முதலீடு செய்வது 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை படிப்படி யாக உயர்ந்துகொண்டே வரு கிறது. இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று அதிகரித்ததால், உள்ளூரிலும் விலை உயர்வு காணப்பட்டது.
22 காரட் தங்கம் நேற்று முன்தினம் கிராம் ரூ.2,727-க்கும், ஒரு பவுன் ரூ.21,816-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.29-ம் பவுனுக்கு ரூ.232-ம் உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.2,756-க்கும், ஒரு பவுன் ரூ.22,048-க்கும் விற்கப்பட்டது.
மேலும் விலை உயரும்
இது தொடர்பாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:
மற்ற மாதங்களைவிட, ஆடியில் தங்கத்தின் தேவை அதிகம் இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக மக்கள் அதிக அளவில் நகை வாங்குவார்கள். இவ்வாறு தங்கத்தின் தேவை அதிகரிப்பதாலும், சர்வதேச அளவில் விலை உயர்ந்ததாலும் தங்கம் விலை நேற்று திடீரென பவுனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணம். கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு பவுன் விலை ரூ.22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலை மேலும் உயரும் என்று தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT