Published : 12 Aug 2017 09:50 AM
Last Updated : 12 Aug 2017 09:50 AM

போத்ராவை மீண்டும் காவலில் விசாரிக்க போலீஸார் மனு

பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது 2 மகன்களை மீண்டும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சென்னை சவுக்கார்பேட்டை மின்ட் தெருவில் நிதி நிறுவனம் மற்றும் வைரம் மதிப்பீட்டு நிறுவனம் வைத்திருப்பவர் முகுந்த் சந்த் போத்ரா. சினிமா தயாரிப் பாளர்கள், நடிகர் - நடிகைகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா. இவர்களும் தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், முகுந்த் சந்த் போத்ரா கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக தொழிலதிபர்கள் சதீஷ்குமார், ஆனந்த் உள்ளிட்டோர் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போத்ரா மற்றும் அவது மகன்கள் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தில் போத்ரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஒரு நாள் காவலில் போலீஸார் விசாரித்தனர்.

மேலும் 4 நாட்கள்

தற்போது, போத்ரா மற்றும் அவரது 2 மகன்களை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x