

தஞ்சை மாவட்ட காவல் எஸ்பியாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இருந்த டி.செந்தில்குமார், தஞ்சை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளியிட்டார்.