Published : 20 Aug 2017 10:28 AM
Last Updated : 20 Aug 2017 10:28 AM
ஜல்லிக்கட்டு கலவரத்தின்போது ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் போலீஸிடம் விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை ஆணையத் தலைவர் ராஜேஷ்வரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது இறுதி நாளில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட் டுள்ளது.
ஜல்லிக்கட்டு கலவரம் நடைபெற்ற இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள், போலீஸாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
கோவையில் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை ஆணையத் தலைவர் ராஜேஷ்வரன் கூறியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாளில் நிகழ்ந்த கலவரத்துக்கு யார் காரணம், எதற்காக கலவரம் நேரிட்டது, போலீஸாரின் தலையீடு இருந்ததா என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மொத்தம் 1,949 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னையில் போலீஸாரே வன்முறையில் ஈடுபட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
பொதுமக்கள் சமர்ப்பித்த வீடியோவில், பெண் போலீஸ்காரர் ஒருவர் ஆட்டோவில் தீ வைப்பதுபோன்ற காட்சி இருந்தது. ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் போலீஸிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT