Published : 15 Aug 2017 07:20 AM
Last Updated : 15 Aug 2017 07:20 AM

பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்

சாலையோரங்களில் நிறுத்தப்படும் பழுதடைந்த வாகனங்களில் தேங்கும் மழைநீரில் டெங்கு வைரஸைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பிருப்பதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சாந்தோம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சிபி, ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கூறியதாவது:

தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இங்கும் சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று, கொசுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது. ஆனால், சாலையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களைக் கண்டுகொள்வதில்லை. இந்த வாகனங்களில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி, டெங்கு கொசு உருவாகும் ஆதாரங்களாக மாறுகின்றன. எனவே இதுபோன்ற வாகனங்களை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களில் தேங்கும் நீரை, அவ்வப்போது அகற்றுகிறோம். அந்த வாகனங்களை அகற்றுவது தொடர்பாக, காவல்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x