Published : 28 Nov 2014 10:31 AM
Last Updated : 28 Nov 2014 10:31 AM

ஜெயேந்திரர், விஜயேந்திரர் சென்னையில் முகாம்

காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் சென்னையில் முகாமிட்டு சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

சென்னை போரூர், செட்டியார் அகரம் பிரதான சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா கார்டனில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய பூஜையில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர்.

காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் தொடர்ந்து 3 வாரங்கள் இங்கு தங்கியிருந்து காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையிலும் மாலையில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பொதுமக்கள் தரிசன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x