Published : 03 Aug 2017 10:47 AM
Last Updated : 03 Aug 2017 10:47 AM

வாக்காளர் பட்டியலில் சேர்க்க 2.66 லட்சம் பேர் மனு

கடந்த ஒரு மாதம் நடந்த 18, 19 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாமில், 2 லட்சத்து 66 ஆயிரத்து 698 பேர் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, 18 மற்றும் 19 வயது நிறைவடைந்தவர்களை, வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் நடத்தப்பட்டது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.

அவர்கள் மூலம், அக்கல்லூரிகளில் படிக்கும் 18 வயது நிறைவடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதுதவிர, ஜூலை 9 மற்றும் 23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இந்த முகாமில் 18,19 வயது நிறைவடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதுதவிர ஆன்லைனிலும் பெயர் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் கடந்த 1 மாதத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x