Published : 09 Aug 2017 08:01 AM
Last Updated : 09 Aug 2017 08:01 AM

ரூ.78 கோடி அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகனை ரூ.78 கோடி அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மண்ணடியில் ‘கேலக்ஸி’ என்ற பெயரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர் இதை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்தவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 8 போலி நிறுவனங்கள் இதில், லியாகத் அலி அலுவலகத்தில் சோதனை நடத்தியதில், வெளிநாடுகளில் இருந்து மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும் மேலும் சில பொருட்களை ஏற்றுமதி செய்ததாகவும் வங்கியில் கணக்கு காட்டப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின. அவரது வங்கிக் கணக்கை ஆராய்ந்தபோது ரூ.8 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசா ரணையில், லியாகத் அலி எந்த பொருட்களையுமே ஏற்றுமதி, இறக்குமதி செய்யவில்லை என்பதும், அப்படி செய்ததுபோல போலியாக ஆவணங்களை தயாரித்து ஹவாலா பணப்பரி மாற்றம் செய்ததும் தெரிந்தது. மேலும், இதேபோல 8 போலி நிறுவனங்கள் தொடங்கி, 8 வங்கிகள் மூலம் ரூ.78 கோடி பணப்பரிமாற்றம் செய்ததை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் லியாகத் அலியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆஜராக சம்மன் அவரிடம் நடத்தப்பட்ட விசா ரணையில், மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. திருவான்மியூரில் வசித்துவரும் அன்பழகனை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் காலையில் வந்த அன்பழகனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, பின்னர் அன்று மாலையே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பழகனை நேற்று முன்தினம் இரவில் எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x