Published : 16 Aug 2017 09:20 AM
Last Updated : 16 Aug 2017 09:20 AM

சாலை விபத்தில் உ.பி.யைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ராய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசிங்(50), சாதனாதேவி(35), சோம்நாத்(40), முனிலால்(65), கமலேஷ்(25), சுனித்(14), பகவான்சிங்(34) ஆகிய 7 பேர் சுற்றுலாவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்துள்ளனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை உளுந்தூர்பேட்டை அடுத்த இருவேல்பட்டு என்ற இடத்தில் நேற்று அதிகாலை வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது.

இதில் சாலைத் தடுப்பை உடைத்து எதிர்புறத்தில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மீது கார் மோதியது.

இதில் ரவிசிங், சாதனாதேவி, சோம்நாத், முனிலால் உயிரிழந்தனர். கமலேஷ், சுனித், பகவான்சிங் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x