Published : 22 Aug 2017 10:21 AM
Last Updated : 22 Aug 2017 10:21 AM

டிடிவி தினகரனின் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

வடசென்னையில் நடப்பதாக இருந்த டிடிவி.தினகரன் பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி வந்த நிலை யில், டிடிவி.தினகரன் தன் ஆதர வாளர்களுடன் கட்சி மூலம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். முதல் கூட்டம் கடந்த 14-ம் தேதி மேலூரில் நடந்தது. தொடர்ந்து 2-வது கூட்டம் 23-ம் தேதி வடசென்னையில் நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டிருந் தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இதற்கு எதிராக தினகரன் தலைமையில் 18 எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், இன்று அவர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நாளை வடசென்னையில் நடப்பதாக இருந்த பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x