Published : 15 Aug 2017 07:19 AM
Last Updated : 15 Aug 2017 07:19 AM

முதல் வகுப்பு சீசன் டிக்கெட் பெற புதிய விதியால் பாதிப்பு

ரயிலில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் பெற முன்னறிவிப்பின்றி திடீரென அடையாள அட்டையின் நகல் கேட்கப்படுவதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஜி.பாஸ்கரன், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையைத் தொடர்புகொண்டு கூறியதாவது:

எழும்பூர் ரயில் நிலையத்துக்கு முதல் வகுப்பு சீசன் டிக்கெட் எடுப்பதற்காக சமீபத்தில் சென்றேன். கடந்த 6 ஆண்டுகளாக சீசன் டிக்கெட் பெற்று பயணம் செய்து வருகிறேன். ஒவ்வொரு முறை சீசன் டிக்கெட் பெறும்போது அடையாள அட்டையின் நகல் கேட்டதில்லை. ஆனால், கடந்த முறை சென்றபோது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அடையாள அட்டையின் நகலை இணைத்து விண்ணப்பம் தரும்படி கேட்கிறார்கள். இதனால் மூத்த குடிமகனாகிய நான் சீசன் டிக்கெட் பெறமுடியாமல் திரும்பினேன். இதுகுறித்த அறிவிப்புப் பலகை எதுவும் அங்கு வைக்கப்படவில்லை. பத்திரிகைகளிலும் செய்தி வரவில்லை இதனால், எங்களைப் போன்ற ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, டிக்கெட் கவுன்ட்டர்களில் அறிவிப்புப் பலகை அமைக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ஜிஎஸ்டி அமலான பிறகு, முதல் வகுப்பு சீசன் டிக்கெட் எடுப்பதற்காக அடையாள அட்டையின் நகல் இணைக்க வேண்டுமென நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, டிக்கெட் கவுன்ட்டர்களில் இதற்கான அறிவிப்புப் பலகை வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x