Published : 23 Aug 2017 12:23 PM
Last Updated : 23 Aug 2017 12:23 PM
மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜன் செல்லப்பாவை நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிடிவி. தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜன் செல்லப்பா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக உசிலப்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டு எஸ்.மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருது நகர் மாவட்ட எம்ஜிஆர். மன்ற செயலாளர் பொறுப்பிலிருந்து அழகர்சாமி நீக்கப்படுகிறார். தஞ்சாவூர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்புக்கு மா. சேகர் நியமிக்கப்படுகிறார்” இவ்வாறு அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT