குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா? - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதில்

குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா? - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதில்
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிப்பாரா என்பது இன்று தெரியும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற் கான தேர்தல் இன்று நடக் கிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் ஆகியோர் போட்டியிடு கின்றனர். ராம்நாத் கோவிந் துக்கு அதிமுகவும், மீரா குமாருக்கு திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. திமுகவில் 89 எம்எல்ஏக்களும், 4 மாநிலங்களவை எம்.பி.க்களும் உள்ளனர்.

இன்று காலை 9 மணி அளவில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் திமுக எம்எல்ஏக்கள் கூடுகின்றனர். பின்னர், எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றாக சென்று வாக்களிக்கின்றனர். எம்.பி.க்கள் டெல்லியில் வாக்களிக் கின்றனர்.

உடல்நலக் குறைவு காரண மாக கடந்த 8 மாதங்களாக கோபாலபுரம் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவரும், திருவாரூர் தொகுதி எம்எல்ஏவு மான கருணாநிதி, இத்தேர்தலில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா என்பது நாளைதான் (இன்று) தெரியும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in